வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காவடிச் சிந்து ( பா .. 1 )



அஞ்சனங்கள் சூழ்ந்தவிழி யோடு - ஒரு
ஆரணங்கைக் கண்டதனால் பாடு - தினம்
அன்னநடைப் போட்டுவரும்
சின்னயிடைக் காணமனம்
ஆறும் - அதன்வா - யூறும் !

கொத்துமலர்க் கூந்தலிலே சூடி - ஒரு
கோலமயில் போல்வருவா ளாடி - தினம்
கொஞ்சுமொழிப் பேசுமிதழ்
மிஞ்சிவிடும் பேரழகைக்
கூட்டி - ஆவல் - ஊட்டி !

சின்னவிழிப் பார்வையினால் சீண்டி - பலர்
சிந்தையையும் நாள்முழுதுந் தீண்டி - அவள்
செவ்வழகைக் காண்பவரில்
எவ்வயதும் தான்பதறச்
செய்யும் - அதுவே - மெய்யும் !

கருத்துகள் இல்லை: