வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காவடிச் சிந்து ( 3 )



சின்னக்கு ழந்தைநீ தங்கமே - நீ
செல்லுமி டங்களில் பங்கமே - உன்
செவ்வழ கானதோ ரங்கமே - இதைச்
சிதைப்பாரடி வதைப்பாரடி
இழப்பாயடி நிலைப்பாடிது
சிந்தனை யோடேநீ எங்குமே - தினம்
சென்றுவந் தால்மனம் பொங்குமே !

கண்ணீரால் சொல்லுமென் சொல்லையே - காணக்
கன்னிப்பெண் ணாகநீ யில்லையே - உனைக்
காத்துவ ளர்ப்பதுந் தொல்லையே - என்
கனவோபல நனவாகுது
கனியேயிது கலிகாலமே
கண்ணெதிர் காண்கிறேன் பிள்ளையே - இங்கு
காமுக ரால்பெருந் தொல்லையே !

கருத்துகள் இல்லை: