சனி, மார்ச் 26, 2016

புதிர் வெண்பா


காலிருக்கும் கையில்லை கண்ணில்லை வீட்டினிலே 
காலமெலாம் நின்றிருக்கும் காவலன்யார் - காலிருந்தும் 
காலிமனை யானாலுங் காலடிமண் ஒட்டாதுக் 
காலாற லில்லாக் கதவு !

கருத்துகள் இல்லை: