வெள்ளி, ஜூன் 03, 2016

யதார்த்தம் ....

அன்புள்ளங் கொண்டோரே மக்கள் - நட்
பண்பில்லா தொரெல்லாம் மாக்கள்
அன்னத்தின் இடையூறே விக்கல் - அதன்
ஆதிக்கம் நிறைந்தாலே சிக்கல்

கன்னத்தின்  அடையாளம் முத்தம் - அதைக்
கடைந்தாலே  தினமேறும் பித்தம்
எண்ணத்தின் ஏக்கம்தான் காதல் - அது 
ஏற்காத நிலையேதான் சாதல்

வண்ணத்தின் சேர்க்கைதான் காட்சி - பெரும்
வம்புகளின் கூட்டுறவே சூழ்ச்சி
பிண்டங்கள் இணைவதுவே புணர்ச்சி - மனம்
பிணைந்தின்பம் காண்பதுவே மகிழ்ச்சி


மேகத்தின்  சேர்க்கைதான் மின்னல் - தேகம்
மோகத்தில் வீழ்ந்தாலே இன்னல்
போகத்தின் துள்ளத்தான் துன்பம் - வெற்றிப்
பெருக்கத்தின் உணர்வேதான் இன்பம் !

கருத்துகள் இல்லை: