ஞாயிறு, ஜனவரி 29, 2017

விருத்தம் ...



கண்கெட்டு கிடக்குதடா உலகம் - காணும்
களமெல்லாம் நடக்குதடா கலகம்

கால்பட்ட இடமெல்லாம் குருதி - இனக்
கோளாறு இருக்கும்வரை உறுதி ..

உள்ளோர்க்கு ஒன்றிங்கு சட்டம் - உயர்
வில்லார்க்கு கிடைக்குதிங்கு பட்டம்

எல்லோர்க்கும் இரத்தநிறம் சிவப்பு - அதை
எண்ணாதோர் மனதிலேனோ கசப்பு ..

கண்கெட்ட விலைவாசி உயர்வால் - மக்கள்
கண்ணீரை அணைத்திங்கே அயர்வார்

புண்ணாகிப் போனோரும் உண்டு - தினம்
புழுதிவாரிப் போடுவோரும் உண்டு ..

ஆகாது என்றாலும் தேகம் - தினம்
காணாது என்றலறும் போகம்

வேகாது வாழ்வோர்க்கும் ஆசை - வெந்து
வேக்காடு ஆனோர்க்கும் ஆசை ...

கருத்துகள் இல்லை: