திங்கள், பிப்ரவரி 06, 2017

வெண்பா ...

கண்டு களிப்பதற்குக் கண்ணேவுன் காந்தவிழி
ஒன்றிங்கு போதுமடி ஊருக்குள் - நின்றென்னை
நேசங் கொளச்செய்த நேரிழையே உன்விழிக்குள்
நேசத்தோ டென்னை நிறுத்து !

கருத்துகள் இல்லை: