திங்கள், ஜனவரி 23, 2017

வெண்கலிப்பா

பெருநடையில் கவியெழுதிப்
பெருங்குரலா லொலிக்காது
பொருள்செறிந்த கவிபாடப்
பெருகுமே புகழுலகில்
கருகொண்டக் கவிதைகளாய்க்
கமழவே நறுந்தமிழில்
தரும்பாடல் திகட்டாது தான் !

கருத்துகள் இல்லை: