திங்கள், பிப்ரவரி 06, 2017

சிந்துப்பா ..ஆனந்தக் களிப்பு



தூளியி லென்னைநீ போட்டு - உன்
துன்பத்தைச் சொல்லியே பாடுவாய் பாட்டு
நூலிடைச் சேலைக்குள் நொந்து - உன்
நோவினைக் கண்டுத விக்கிறேன் வெந்து

ஆகாத வார்த்தையு மில்லை - அம்மா
ஆராரோ பாடிட ஆனந்த மில்லை
நோகாத வாறென்னைப் போட்டு - நொடி
ஒன்றேனும் பாடுநீ நல்லொரு பாட்டு !

கருத்துகள் இல்லை: