புதன், மார்ச் 08, 2017

வேதனையில் ....



நதியின் ஓரம் நடக்கையிலே
நாணும் நாணல் காணுகையில்
விதியா லென்னை இழந்தவளின்
வெட்கம் என்னில் சிலிர்க்கிறது !

புதிதாய் செல்வச் செழிப்பினிலே
புகுந்தோர்க் களிப்பைக் காணுகையில்
எதிரும் புதிரும் எனக்குள்ளே
ஏளனச் சிரிப்பே வருகிறது !

உதிக்குங் காலைக் கதிரவனின்
ஒளியில் உலகே சிரிக்கையிலே
எதிர்க்கும் ஏழை முகங்கண்டால்
ஏனோ மனதென் பதைக்கிறது !

முதியோ ரில்லத் திண்ணைகளில்
முனகல் ஒலிகள் கேட்கையிலே
வதியும் பிள்ளைத் தொல்லைதரும்
வேதனை காதினைச் சுடுகிறது !

கருத்துகள் இல்லை: