வியாழன், டிசம்பர் 13, 2012

சித்திரப் பெண் !!

கண்ணைக் குறி வைத்து
கற்பனையில் உனை வரைந்த
கையை நான் வெட்டி விட்டால்
கலகங்கள் ஏதுமில்லை ...

கொஞ்சும் புறாவிரண்டும்
கொஞ்சுதலை மறந்து நின்று
உன் எழிலை ரசிக்கையிலே
உருத்துதடி என் உயிரும் ...

பூச்சூடி திலகம் இட்டு
பூ மேனி மனப்பவளே
பூப்பெய்தி காலம் ஆச்சோ
புண் முறுவல் சொல்லுதடி
பூவிதழும் பேசுதடி ....

மல்லிகைச் சரம் அதுவும்
மயங்கியுந்தன் மேனியதை
உற்று உற்று பார்க்கையிலே
உயிர் எனக்கு பிரியுதடி ....

உன் கண்ணை தரை தாழ்த்தி
கை விரலால் நடை பயிலும்
திண்ணைச் சுவர் சாய்ந்தவளே
திரும்பி என்னைப் பாராயோ
உன்னைச் சிறை வைத்து
உட்கார வைத்தது யார் .....

நினைவுகளே ...