புதன், நவம்பர் 06, 2013

காகம் வெறுத்த குயில் ..

பாடிக் களித்ததொரு குயி லொன்றை
கூடிக் குலவியதோர் காகங் காண
வாடிக் குமுறியது தன் அரைகுரலால்
சீண்டித் துரத்தியது மனம் நொந்து !

ஊடல் கொள்ளவொரு கூடில்லை
பாடல் உனக்குவொரு கேடாவென்று
மாடக் கோபுரத்தில் வாழ்வது போல்
வேண்டாக் கதை சொல்லி வருத்தியது !!


     அஷ்பா அஷ்ரப் அலி

சனி, நவம்பர் 02, 2013

யாரடா மனிதன் இங்கே !!


மின்சார வெளிச்சத்தில்
கண்ணை மூடிக்கொண்டது
விளக்கின் ஒளி

கவனம் இல்லையேல்
கரணம்தான்
கிளைகள் சொல்கிறது
இலைகளுக்கு

சிக்கனம்
சட்டை போட்டுக்கொண்டது
மாதக் கடைசியில்

செத்துக் கிடந்தது
தெரு நாய்
நடுத்தெருவில்
சொந்தங்களை தொலைத்துவிட்டு

முந்தானை மட்டும்
பார்த்துப் பார்த்தே
மூச்சை இழந்தது ஆசைகள்

தூங்கித் தூங்கியே
கவலைக் கிடமாகியது
வேலை இழந்த அம்மிக்கல்லு

கடித்து விடாதே
அலறியது
சோற்றில் கிடந்த 'கல்'

எச்சில் இலைகளுக்கு
சொந்தம் கொண்டாடியது
காகங்கள்

மனிதனுக்கும்
மதம் பிடித்து விட்டதாம்
தெரியாதவர்களாய்
சொல்லிக் கொள்கிறார்கள்
'மனிதர்கள் '


*  அஷ்பா அஷ்ரப் அலி   *

உன்னருகில் நானிருந்தால் ..

கொலுசொலி கேட்கிறதே !!