வையம் எங்கும் உன்பெயரில்
வைதல் இல்லை உணர்வாயோ
வைதல் இல்லை உணர்வாயோ
பையில் இட்டு வைப்பதெனில்
கையிற் கொண்டே நடந்திடுவோம்
பெய்யும் மழைக்கும் துணைநின்று
மையம் இட்டும் நின்றிடுவாய்
மெய்தான் உலகில் நீயின்றி
ஐயோ ! உலகில் வாழ்வேது !
எங்கும் எதிலும் உன்ஓட்டம்
தொங்கிக் கொண்டே துள்ளுதடி
அங்கம் அசைத்து அடிவைத்து
பங்கம் செய்தேன் மகிழுகிறாய்
வங்கக் கடலில் உன்ஆட்டம்
நீங்கா நினைவில் நிற்குதடி
சங்கம் வைத்தோ சதிசெய்தாய்
புங்கக் காற்றே பதில்சொல்லு !!
அஷ்பா அஷ்ரப் அலி