புதன், டிசம்பர் 11, 2013

இன்னொரு பெண் எதற்கு ?

அஞ்சனங்கள்
சூழ்ந்த உந்தன் விழியில்
நெஞ்சம் ஏனோ
வீழ்ந்ததடி சதியில் ..

பஞ்சம் இல்லா
அழகிலுந்தன் ஒளிர்வில்
சஞ்சலங்கள்
நிறையுதடி நினைவில் ..

வஞ்சியுந்தன்
மின்னுகின்ற கன்னம்
கொஞ்சுவென
கெஞ்சுதடி என்னை ..

மஞ்சம் கொள்ள
தூண்டுதடி ஆவல்
தஞ்சம் கொள்ள
தந்துவிடு உன்னை ..

பஞ்சமின்றி
பால் பொழிய வாழ்வு
பூஞ்சிறகுன்
கை கோர்க்க வேண்டும் ..

நெஞ்சிலெங்கும்
நீயிருக்க நிழலாய்
மிஞ்சியொரு
பெண் எதற்கு வேண்டும் ...

  அஷ்பா அஷ்ரப் அலி  

கருத்துகள் இல்லை: