ஞாயிறு, மார்ச் 27, 2016

கட்டளைக் களிப்பா !

                                       
           அரையடி : தேமா - கூவிளம் - கூவிளம் - கூவிளம் 



ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்
ஏனோ எம்மிடை இத்தனை இன்னலோ
போற்று முள்ளமும் பாங்குட னின்றியே
போற்றார் போலவே வாழ்கிறோ மெங்கிலும்
ஏற்றத் தாழ்வினை எத்தனை காலமாய்
என்றும் நம்மிடை கொண்டுமே வாழ்வது
மாற்ற மில்லையேல் மண்ணிலே நாமெலாம்
மாக்கள் போலவே வாழ்கிறோ முண்மையே !

கருத்துகள் இல்லை: