வெள்ளி, மே 06, 2016

ஆசிரியத் தாழிசை !

இருப்போ ரெல்லாம் இல்லா தவர்மேல்
தருக்கம் செய்யின் வருத்த மெனக்குள்
இருக்கு மெவரும் ஈதல் நன்றே !

கவளம் கேட்டே கையை  நீட்டப்
பவளம் வேண்டா பருக்கை யளித்தே
அவலப் படுதல் ஆற்றுதல் நன்றே !

கல்லாக் குழந்தை கடைநிலை மக்கள்
இல்லாக் கல்வி இனிதே கற்க
உள்ளோ ரெல்லாம் உதவுதல் நன்றே !

கருத்துகள் இல்லை: