வெள்ளி, மே 06, 2016

ஆசிரியத் தாழிசை


வன்புணர் வாளரே வழியினி லெங்கும்
என்மக ளுனைநான் எண்ணியே கவலை
கண்மணி கவனங் காமுக ரெதிரிலே !

குழவிக ளாயினுங் குமரிக ளாயினும்
சுழலுங் காமச் சுடரில் குளித்திடக்
குழந்தாய் ! குதறுங் கூட்டம் எதிரிலே

அயலவர் நெஞ்சிலு மண்டி விடாதே
துயர்தரத் தயங்கார் தூண்டிடக் காமம்
அயர்ந்து விடாதே அல்லல்  எதிரிலே !

கருத்துகள் இல்லை: