சனி, ஜனவரி 18, 2014

மனையினைக் காப்பாள் !

  மனையினை  காத்திடும்  மனைவியவள் -  நல்
  மாண்பினை  தினமும்  போற்றுங்கடா !
  மனையினில்   தீபச்  சுடரொளியாய் -  புது
  மங்கலம்  நிறைவதைப்  பாருங்கடா !

  துணையெனக்  கண்டவள்  துன்பமெலாம் -  உன்
  தோளினில்  கிடப்பவள்  காட்சியடா !
  அணைத்திட  மட்டுமா  அவளுனக்கு -  இல்லை
  அனைத்திலும்  உனக்கே 
சொந்தமடா !

  தன்னையே  தந்தவள்  தரணியிலே -  தரம்
  தாழ்ந்திட  வாய்ப்பே  இல்லையடா !
  பண்புடன்  வாழ்பவள்  நெஞ்சத்திலே -  புது
  பொலிவுடன்  கிடந்தே  வாழுங்கடா !

  தன்னிக  ரற்ற  அன்பிலவள்  -  தினம்
  தளும்பிடும்  இதயத்தை  பாருங்கடா !
  இன்முகத்  தாலவள்  கைகோர்த்து  -  என்றும்
  இன்பக்  கடலில் 
மூழ்குங்கடா  !


      அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: