செவ்வாய், ஜனவரி 21, 2014

யாரும் இல்லை !!

கண்ணோடு  கண்காணும்  காத  லெல்லாம்
கையோடு  கைகோர்த்து  இணைவ  தில்லை
பண்ணோடு  பெயர்பெற்ற 
மாந்த  ரெல்லாம்
புண்னிதயம்  இல்லாமல்  மரித்த  தில்லை

விண்ணோடு  மண்ணெங்கும்  வீசுங்  காற்று
வீணாக  ஓய்வென்று  படுத்த  தில்லை
மண்ணோடு 
மண்சேர்ந்த  உறவினர்  தன்
மண்வாழும்  உறவுகளோ  நினைப்ப தில்லை

வண்டோடு  அணைகின்ற பூக்கள்  ஒன்றும்
ஒருபோதும்  பூவின்மணம்  இழப்ப  தில்லை
கண்கூடாய்  கண்ணெதிரே  கண்ட
உண்மை
கசப்பென்று  வாய்ஏனோ  திறப்ப  தில்லை

அதிகாரம்  கொண்டிங்கு  அரசாள்  வோரும்
தள்ளாடும்  மக்கள்நிலை  பார்ப்ப  தில்லை
விதியென்று  வாழ்வினையே   நொந்  திட்டோரும்
விடியலதன்  புன்சிரிப்பைக்  கண்ட  தில்லை

சதிகாரக்  கூட்டங்கள்  போடும்  ஆட்டம்
அதிகாரம்  உள்ளோரும்  காண்ப  தில்லை
நதியெனவே  பெருக்கெடுத்த  நலிந்தோர்  கண்டு
நானிலத்தில்  நலமளிக்க  பிறந்தோ   ரில்லை ..



      அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: