சனி, ஏப்ரல் 16, 2016

எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

         விளம் - மா -  விளம் - மா 
          விளம் - விளம் - மா 


தன்னிக ரற்றத் தமிழ்மொழி  தன்னில்
   தாகமென் றுரைப்பவ  ரிங்கே
அன்னிய மொழியை அவரவர்க் குள்ளே
   அழகுடன் மொழிவதைக் காண
இன்புற லின்றி இகழ்வதிம் மொழியை
   இகழ்வது அன்னையைப் போன்றே
என்பதை யுணரா திருப்பவ ரவரை
   என்றுமே எண்ணிடச் சிணமே !

கருத்துகள் இல்லை: