செவ்வாய், டிசம்பர் 31, 2013

காற்றே நில் !!

வையம் எங்கும் உன்பெயரில்
வைதல் இல்லை உணர்வாயோ

பையில் இட்டு வைப்பதெனில்
கையிற் கொண்டே நடந்திடுவோம்

பெய்யும் மழைக்கும் துணைநின்று
மையம் இட்டும் நின்றிடுவாய்

மெய்தான் உலகில் நீயின்றி
ஐயோ ! உலகில் வாழ்வேது !


எங்கும் எதிலும் உன்ஓட்டம்
தொங்கிக் கொண்டே துள்ளுதடி

அங்கம் அசைத்து அடிவைத்து
பங்கம் செய்தேன் மகிழுகிறாய்

வங்கக் கடலில் உன்ஆட்டம்
நீங்கா நினைவில் நிற்குதடி


சங்கம் வைத்தோ சதிசெய்தாய் 
புங்கக் காற்றே பதில்சொல்லு !!

அஷ்பா அஷ்ரப் அலி

கருத்துகள் இல்லை: