செவ்வாய், டிசம்பர் 31, 2013

சொல்லாத எண்ணங்கள் ..

நெளிந்தோடும் நதியாக கண் பேசுது - அதை
 வழிந்தோடும் கண்ணீரும் கதை கேட்குது

விளையாடி மகிழ்கின்ற சிறு குழந்தையாய் - என்
 களையாத கனவெல்லாம் நடை பழகுது

மலைபோல பாரங்கள் தலை ஏறுது - புது
 மாப்பிள்ளை போலெந்தன் மனம் மாறுது

சொல்லாத எண்ணங்கள்  பறி போகுமோ - அது
 சில நேரம் என்னோடு குடியேறுமோ

அடையாளம் தெரியாத முகம் கண்டதால் - மனம்
 படைபோல எனைசூழ்ந்து உயிர் வாங்குது


        அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: