வியாழன், டிசம்பர் 19, 2013

மதங்களின் மீதும் மதம்

வேதங்கள் சொல்லும்
போதனை எல்லாம்
வேதனை புரிவது
தீதது என்றே

வேதம் ஓதிடும்
போதகர் எங்கும்
பாதகம் புரிவதை
பார்த்ததும் உண்டோ

உத்தம புத்தன்
சத்தமாய் சொன்னான்
சித்தமாய் அன்பே
சுத்தம் என்று

சாத்தனை மறந்த
புத்திரர் சிலரோ
உத்திகள் பண்ணும்
சாத்தான் ஆனார்

மதங்களின் மீது
மதம் பிடித்தாடும்
போதகர் எவரும்
போதன் இல்லை ..

அஷ்பா அஷ்ரப் அலி

கருத்துகள் இல்லை: