வியாழன், பிப்ரவரி 16, 2017

வளையற் சிந்து ...


கல்வியதைக் கற்றிடுவாய்
கசடறவே நாளும் - உன்
கனவுகளும் மீளும் - தினம்
கற்பதனால் சூழும் - நல்ல
காலமுன்னில் கனிந்துவந்து
கண்ணெதிரே வீழும் !

கல்வியுனக் களித்தவரைக்
காலமெலாம் போற்று - அவர்
காலடியில் ஊற்று - தினம்
கண்ணியத்தி லேற்று - இது
கற்றறிந்த கல்விமான்கள்
கற்றுத்தந்த கூற்று !

கருத்துகள் இல்லை: