செவ்வாய், மார்ச் 11, 2014

எப்பக்கம் திரும்புவது ?

அகிலத்தின் அதிபதியே உன்னை அன்றி 
அருளாளன் எமக்கிங்கு யார்தான் உண்டு 
முகிழ்க்கின்ற துன்பங்கள் முடிச் சவிழ்த்து
முனைவின்றி எமையிங்கு காத் தருள்வாய் 

வேதித்தார் தரணியிலே வினயம் கொண்டு 
வேற்றுமுனை உருவாகும் நிலையை மாற்றி 
தாகித்தே உந்தன்பால் தர்க்கம் பண்ணத் 
தவித்திடுவோர் நெஞ்சத்தை குளிரச் செய்வாய் 

வேதத்தின் வாய்மையினை உணர்ந்தோர் இங்கு 
வாதத்தில் வாழுகிறார் வாய்மை மாற்றி 
ஆதன்போல் அறிந்தோரால் அல்லல் எங்கும் 
ஆளாளுக் கொன்றொன்று சொல்லும் சொல்லால் 

வாதாடி வாதாடி வாசல் தோறும் 
வெவ்வேறு சின்னங்கள் உந்தன் பெயரால் 
ஏதேனும் ஓர்வழியில் செல்லச் சொல்லும் 
என்மனதை எப்படித்தான் தேற்றிக் கொள்வேன் ...

அஷ்பா அஷ்ரப் அலி

கருத்துகள் இல்லை: