ஞாயிறு, மே 22, 2016

துயரத்திலே ..


ஆற்றாத துயரமெல்லாம் - தினம்
அழுது என்னில் புரள்கிறதே
காற்றாக நானிருந்தால் - உன்
காதில் வந்து  சொல்லிடுவேன்

ஊற்றாக  நானிருக்க - ஒளி
விளக்காக நீ யிருக்க
ஏற்றாத தீபமெல்லாம் - இங்கு
இருந்தால்தான்  நமக்கு என்ன


தேற்றாத இதயங்களே  - தினம்
தூற்றி எனைச் சிரிக்கையிலே
போற்றுகிறேன் கிளியேவுன் - வைர
வாய்மொழியே பலம் எனக்கு !

கருத்துகள் இல்லை: