திங்கள், ஜனவரி 23, 2017

விருத்தம்



விருந்தென மதுவை வார்த்து
....விளித்திடும் நட்பே வேண்டாம்
மருந்தெனச் சொன்னால் கூட
.... மதுவினைத் தொடவே வேண்டாம்

அருந்திட ஆற்ற லேற்றும்
....அகன்றிடுந் துன்பம் மென்பார்
அருந்தியே ஆர்ப்ப ரித்தே
.... ஆறுதல் சொல்லிக் கொள்வார்


வருந்தியே கண்ணீர் சிந்தும்
.... அருந்தியோர் சொல்வ தெல்லாம்
வருத்திடும் பிணிகள் சேர்ந்து
.... வாழ்வதில் சாதல் மேலாம் !

கருத்துகள் இல்லை: