செவ்வாய், பிப்ரவரி 14, 2017

ஊற்றாக நானுக்கு ..



ஆற்றாத துயரமெல்லாம் - தினம்
... அழுது என்னில் புரள்கிறதே
காற்றாக நானிருந்தால் - உன்
... காதில் வந்து சொல்லிடுவேன் !

ஊற்றாக நானிருக்க - ஒளி
... விளக்காக நீ இருக்க
ஏற்றாத தீபமெல்லாம் - இங்கு
... இருந்தால்தான் நமக்கு என்ன !

தேற்றாத இதயங்களே - தினம்
... தூற்றி எனைச் சிரிக்கையிலே
போற்றுகிறேன் கிளியேவுன் - வைர
... வாய்மொழியே பலம் எனக்கு !

கருத்துகள் இல்லை: