சனி, ஜனவரி 26, 2013
ஞாயிறு, ஜனவரி 20, 2013
சனி, ஜனவரி 19, 2013
திங்கள், ஜனவரி 14, 2013
ஞாயிறு, ஜனவரி 13, 2013
புதன், ஜனவரி 09, 2013
செவ்வாய், ஜனவரி 08, 2013
கனவொன்று கண்டேன் !!!
கனவொன்று கண்டேன்
கரை தாழக் கண்டேன்
இனவாதம் பேசும்
இழிந்தோரைக் கண்டேன் ...
வசை பாடும் உலகின்
இழிவோரைக் கண்டேன்
அசைந்தாடும் நெஞ்சின்
ஆசைகள் கண்டேன் ...
நில்லாமல் ஓடும்
நிலவொன்றும் கண்டேன்
நாள் தோறும் போற்றும்
பெற்றோரைக் கண்டேன் ..
கல்லாதார் செய்யும்
தீவிணை கண்டேன்
நல்லோர்கள் தினமும்
மடிவதைக் கண்டேன் ...
இல்லாதார் தெருவில்
இரப்பதைக் கண்டேன்
உள்ளவர் எல்லாம்
உறங்கிடக் கண்டேன் ...
நற்பணி செய்து
நான் வாழக் கண்டேன்
நானிலம் என்னை
தூற்றிடக் கண்டேன் ...
கண்ணுக்குள் வாழும்
அவளையும் கண்டேன்
மென்மையாய் அவளை
தழுவிடக் கண்டேன் ,,,
கரை தாழக் கண்டேன்
இனவாதம் பேசும்
இழிந்தோரைக் கண்டேன் ...
வசை பாடும் உலகின்
இழிவோரைக் கண்டேன்
அசைந்தாடும் நெஞ்சின்
ஆசைகள் கண்டேன் ...
நில்லாமல் ஓடும்
நிலவொன்றும் கண்டேன்
நாள் தோறும் போற்றும்
பெற்றோரைக் கண்டேன் ..
கல்லாதார் செய்யும்
தீவிணை கண்டேன்
நல்லோர்கள் தினமும்
மடிவதைக் கண்டேன் ...
இல்லாதார் தெருவில்
இரப்பதைக் கண்டேன்
உள்ளவர் எல்லாம்
உறங்கிடக் கண்டேன் ...
நற்பணி செய்து
நான் வாழக் கண்டேன்
நானிலம் என்னை
தூற்றிடக் கண்டேன் ...
கண்ணுக்குள் வாழும்
அவளையும் கண்டேன்
மென்மையாய் அவளை
தழுவிடக் கண்டேன் ,,,
செவ்வாய், டிசம்பர் 25, 2012
திங்கள், டிசம்பர் 24, 2012
ஞாயிறு, டிசம்பர் 23, 2012
வெள்ளி, டிசம்பர் 14, 2012
வியாழன், டிசம்பர் 13, 2012
சித்திரப் பெண் !!
கண்ணைக் குறி வைத்து
கற்பனையில் உனை வரைந்த
கையை நான் வெட்டி விட்டால்
கலகங்கள் ஏதுமில்லை ...
கொஞ்சும் புறாவிரண்டும்
கொஞ்சுதலை மறந்து நின்று
உன் எழிலை ரசிக்கையிலே
உருத்துதடி என் உயிரும் ...
பூச்சூடி திலகம் இட்டு
பூ மேனி மனப்பவளே
பூப்பெய்தி காலம் ஆச்சோ
புண் முறுவல் சொல்லுதடி
பூவிதழும் பேசுதடி ....
மல்லிகைச் சரம் அதுவும்
மயங்கியுந்தன் மேனியதை
உற்று உற்று பார்க்கையிலே
உயிர் எனக்கு பிரியுதடி ....
உன் கண்ணை தரை தாழ்த்தி
கை விரலால் நடை பயிலும்
திண்ணைச் சுவர் சாய்ந்தவளே
திரும்பி என்னைப் பாராயோ
உன்னைச் சிறை வைத்து
உட்கார வைத்தது யார் .....
கற்பனையில் உனை வரைந்த
கையை நான் வெட்டி விட்டால்
கலகங்கள் ஏதுமில்லை ...
கொஞ்சும் புறாவிரண்டும்
கொஞ்சுதலை மறந்து நின்று
உன் எழிலை ரசிக்கையிலே
உருத்துதடி என் உயிரும் ...
பூச்சூடி திலகம் இட்டு
பூ மேனி மனப்பவளே
பூப்பெய்தி காலம் ஆச்சோ
புண் முறுவல் சொல்லுதடி
பூவிதழும் பேசுதடி ....
மல்லிகைச் சரம் அதுவும்
மயங்கியுந்தன் மேனியதை
உற்று உற்று பார்க்கையிலே
உயிர் எனக்கு பிரியுதடி ....
உன் கண்ணை தரை தாழ்த்தி
கை விரலால் நடை பயிலும்
திண்ணைச் சுவர் சாய்ந்தவளே
திரும்பி என்னைப் பாராயோ
உன்னைச் சிறை வைத்து
உட்கார வைத்தது யார் .....
செவ்வாய், டிசம்பர் 11, 2012
சனி, டிசம்பர் 08, 2012
புதன், டிசம்பர் 05, 2012
திங்கள், டிசம்பர் 03, 2012
புதன், நவம்பர் 28, 2012
மரணப் படுக்கையில் .......
பாதி விழித்த படி
பார்க்காதவன் போல் கிடக்கும்
என்னைப் பார்க்க
வந்து வந்து போகிறார்கள் !
மணித் துளிகள் நகர நகர
வருபவர்கள் எல்லாம்
எப்போது என்னை
தூக்கிச் செல்வார்கள் என
கேட்டுச் செல்கிறார்கள்
கிடத்திப் பார்க்க மனமில்லாமல் !
வார்த்தைக்கு வார்த்தை
முறையோடும் பெயரோடும்
அழைத்தவர்கள் எல்லாம்
ஒரே நாளில் மாற்றி விட்டார்கள்
என் பெயரை "மையம் " என்று
இரு உலகுக்கும் நடுவில் கிடப்பதை
அறிந்து கொண்டவர்களாக !
மகிழ்ச்சியை
அள்ளி அள்ளி கொடுத்த என்னை
மகிழ்ந்தவர்கள் எல்லாம்
மறந்து விடுவார்களோ என
பயமாக இருக்கிறது
பார்த்துப் பார்த்து திரும்பிச் செல்கையில் !
சண்டை பிடிப்பது போல்
சப்தமும் கேட்கிறது
பக்கத்தில் நிற்பவர்கள்
சொல்லிக் கொள்கிறார்கள்
என் மிச்சம் மீதிகளை
அள்ளிச் செல்லவாம் !
என்னையே கண்ணாக நினைத்து
அழுதுத் தீர்க்கிறாள் மனைவி மட்டும்
துடிக்கிறது மனசு
எழுந்து ஆறுதல் சொல்ல
மரணித்துக் கிடப்பதையும் மறந்தபடி !!!
பார்க்காதவன் போல் கிடக்கும்
என்னைப் பார்க்க
வந்து வந்து போகிறார்கள் !
மணித் துளிகள் நகர நகர
வருபவர்கள் எல்லாம்
எப்போது என்னை
தூக்கிச் செல்வார்கள் என
கேட்டுச் செல்கிறார்கள்
கிடத்திப் பார்க்க மனமில்லாமல் !
வார்த்தைக்கு வார்த்தை
முறையோடும் பெயரோடும்
அழைத்தவர்கள் எல்லாம்
ஒரே நாளில் மாற்றி விட்டார்கள்
என் பெயரை "மையம் " என்று
இரு உலகுக்கும் நடுவில் கிடப்பதை
அறிந்து கொண்டவர்களாக !
மகிழ்ச்சியை
அள்ளி அள்ளி கொடுத்த என்னை
மகிழ்ந்தவர்கள் எல்லாம்
மறந்து விடுவார்களோ என
பயமாக இருக்கிறது
பார்த்துப் பார்த்து திரும்பிச் செல்கையில் !
சண்டை பிடிப்பது போல்
சப்தமும் கேட்கிறது
பக்கத்தில் நிற்பவர்கள்
சொல்லிக் கொள்கிறார்கள்
என் மிச்சம் மீதிகளை
அள்ளிச் செல்லவாம் !
என்னையே கண்ணாக நினைத்து
அழுதுத் தீர்க்கிறாள் மனைவி மட்டும்
துடிக்கிறது மனசு
எழுந்து ஆறுதல் சொல்ல
மரணித்துக் கிடப்பதையும் மறந்தபடி !!!
ஞாயிறு, நவம்பர் 25, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)