வெள்ளி, ஏப்ரல் 01, 2016

புதுக் கவிதை !


அடுப்புப் புகையில்
அப்பச் சட்டியுடன்
தினமும் குளிக்கும் அம்மா

பக்க வாதத்தால்
படுத்த படுக்கையில்
பரிதாபத்தோடு கிடக்கும் அப்பா

பருவம் வந்தும்
பருவத்துக் கனவுகளோடு
துணிக்கடையில்
வேலை செய்யும்
கல்யாணம் ஆகாத  அக்கா

கிழிந்த சட்டையுடன்
ஓட்டை ' டியூப்களுக்கு '
பஞ்சர் போடுகிறான்
சைக்கிள் கடையில்  தம்பி

எல்லாம் தெரிந்தும்
ஒன்றுமே தெரியாதவளாய்
நேற்று கண்ட அவனுடன்
வீட்டைவிட்டு ஓடிப்போன  நான்  !

கருத்துகள் இல்லை: