ஞாயிறு, டிசம்பர் 04, 2011

முதுமை

ஆடித் திறிந்த கால்கள்
அடங்கிக் கிடக்கிறது
முதுமை என்னை
ஆக்கிரமித்தபோது .....

எழுந்து
நடமாடப் பார்க்கிறேன்
விழுந்து
முடமாகி விடுவேனோ
என
பயமாக இருக்கிறது .....

சந்தோசங்களை
தொலைத்த நாட்களும்
உணர்வுகளை உறங்க வைத்த
உருப்படாத
அந்த ராத்திரிகளும்
என் மனதை
இன்னும்
அரித்துக்கொண்டே இருக்கிறது .......

என்ன வாழ்க்கை
வாழ்ந்துவிட்டேன்
என்னையே நான்
நொந்து கொள்கிறேன் ........

ஸ்பரிச உணர்வுகள்
என்னை
தூக்கிவிடப்பார்க்கிறது
பாழாய்ப்போன என்
உடம்பு மட்டும்
என்னை அப்படியே
அமுக்கிப் பிடிக்கிறது ......

பேசப் பார்க்கிறேன்
முடியவில்லை
பேச்சுகூட
என்னைப் போலவே
படுத்த படுக்கையாய்.......

உறவுகள்
என்னையே
உற்று உற்று பார்க்கிறார்கள்
எப்போது என்னை
தூக்கிப் போகலாம் என்ற
அவசரத்தில் ...........

ஆனாலும்
பழைய நினைவுகள் மட்டும்
என்னையே
சுற்றிச் சுற்றி வருகிறது
ஒரு
குட்டி போட்ட பூனையைப்போல........

முதுமை வரவேண்டும்
முதிர்ந்து போன
வாழ்க்கையை
நினைத்துப் பார்க்க ...........

கருத்துகள் இல்லை: