வெள்ளி, ஜனவரி 13, 2017

விருத்தம்





நீரசையும் குளத்தினிலே நின்ற வாறு

நினைவிழந்து நிட்பதுமேன் அல்லிப் பாவாய்

நாரசையாப் பொழுதினிலும் சிரிக்கும் முன்னை

நோகடித்தா ராரென்று சொல்வா யல்லி


ஊரறியக் கதிரவனும் உதிக்கும் பொழுதில்

உலகமெலாம் ஒளிருகின்ற வேளை தன்னில்

பேரறியாப் பிள்ளைபோல் பதுங்கிப் பின்னே

படபடத்து நிட்பதுமேன் பகிர்வாய் அல்லி




மாலைவரும் மதியாளின் மயக்கும் மொளியில்

மலர்வதெனச் சொல்கின்றார் உண்மை என்ன

ஓலையுனக் கனுப்பினாளோ ஒற்றை வரியில்

ஓர்மனமாய் காதலுண்டோ சொல்வாய் அல்லி !

கருத்துகள் இல்லை: