வெள்ளி, ஜனவரி 13, 2017

அறுசீர் விருத்தம்

கருவறை தொட்டுக் கல்லறை வரையுங்
களிப்பினில் வாழ்வதற்கே
விரும்பிய படியே வாழ்ந்திடு வென்று
விழிகளைப் படைத்தவனாம்
தரும்வளம் யாவும் தரணியி லிங்கே
தரமெனத் தந்தவனாம்
அருள்மிகும் இறைவன் ஆற்றலை இங்கே
அறிந்திட ஆளிலையே !

கருத்துகள் இல்லை: