வெள்ளி, மார்ச் 03, 2017

பொன்னே பிரதானம் ...



மண்ணில் உறங்கும் வளங்களிலே
மாண்புறப் பிறப்பது பொன்னாகும் - நம்
மங்கையர் தம்மவர் மனங்களிலே
மாறா திருப்பதும் பொன்னாகும்

கண்ணியம் நிறைந்தே காலமெல்லாம்
கண்ணெதிர் கிடப்பதும் பொன்னாகும் - நட்
புண்ணியம் நிறைந்தே பிறப்பதனால்
பெட்டகம் வாழ்வதும் பொன்னாகும்

துணிமணி கோடியே இருந்தாலும்
அணிந்திட மிளிர்வது பொன்னாகும் - நல்
அணிகல மாசைகள் அரும்புவிட
அரிவையர் கனவிலும் பொன்னாகும்

கனிதரும் மரங்களில் அணில்அலையும்
வனிதையர் மனங்களில் பொன்அலையும் - இந்
நனினியில் வாழும் நலிவுற்றோர்
நாவினில் நடப்பதும் பொன்னாகும்

மங்கள மென்றால் மனைகளிலே
மமதையில் கிடப்பதும் பொன்னாகும் - அது
அங்கம் கிடந்தே உறங்குவதால்
தங்கமென் ராறோ பெயரிட்டார்

கருத்துகள் இல்லை: