வெள்ளி, அக்டோபர் 11, 2013

தமிழோடு வாழ வேண்டும் ...

கண்ணில் விளக்கு  வைத்து
கடல் நீரில் நனைய வைக்கும் - இந்த
கண் கெட்ட காதல் அது
கனவிலேனும் எனக்கு வேண்டாம்  !

எண்ணில் இலக்கு வைத்து
என் மார்பில் சாய்ந்தாடி - தினம்
பொன் மீது கனவு காணும்
பொன்னாசை பெண்ணும் வேண்டாம் !

பூகோலப் பந்தல் கட்டி
பகலிரவு ஆசை காட்டி - என்னை
புழுப் போல துடிக்க வைக்கும்
புவி வாழ்வும் எனக்கு வேண்டாம் !

மூத்தவனாய் ஆக்கி என்னை
மூவிரண்டு பெற்ற அன்னை - அவள்
மீதி பெற்ற அத்தனையும்
மிதிப்பதனால் எனக்கு வேண்டாம் !

மஞ்சக் கயிறு கட்டி
மஞ்சத்தில் கலவி கொண்டு - தினம்
கொஞ்சிக் கூத்து ஆடி
மிஞ்சிப் புணருதலும் எனக்கு வேண்டாம் !

தன்னில் நிறைவு கண்டு
தரணியெங்கும் புகழ் பாடும் - நல்ல
தமிழ் வாழும் காலமெல்லாம்
வாழ்ந்து நானும் மாள வேண்டும் !!


 அஷ்பா அஷ்ரப் அலி

கருத்துகள் இல்லை: