திங்கள், ஏப்ரல் 11, 2016

எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம் !

சொற்புலமை  யில்லாமல் சொற்ப காலம்
சொந்தமொழி நடையினிலே கதைகள் போலப்
பற்பலவாய்க் கவிதைகளைப் பாடித் தேய்ந்து
பைந்தமிழின் சோலையிலே புகுந்தேன் பின்னே
கற்றவராம் பாவலரின் கவிதைத் தொண்டு
கைகொடுத்து உதவுதென்னில் கைமுறை யாலே
நற்றமிழின் நடையழகை நேர்த்தி யோடே
நடந்தபடிக் கற்கின்றேன் நானு மங்கே !


காய் -காய் - மா - தேமா 

கருத்துகள் இல்லை: