ஞாயிறு, ஜனவரி 29, 2017

புதிர் வெண்பா ..




வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல் கண்டால் கலங்குவோன்யார் ? - நன்றெனவே
கன்ன மிடாதபடிக் காப்பவனா மில்லத்தைக்
கன்னகங் கண்டதிரும் பூட்டு !


- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -




மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
19 hrs
#புதிர்வெண்பா
கவிஞர்களே! நேரிசை வெண்பாவின் இரண்டடிகளை எழுதிவிட்டேன். ஒரு புதிராக அந்த அடிகள் அமைந்துள்ளன. மீதமுள்ள இரண்டு அடிகளைத் தனிச்சீரிலிருந்து விடையாக எழுதுங்களேன்.
புதிர் வெண்பா - 1
**********************
வண்ணங் கறுத்திருப்பான் வாய்வளைந் துண்ணுழைவான்
கன்னக்கோல் கண்டால் கலங்குவோன்யார்?


கருத்துகள் இல்லை: