வியாழன், பிப்ரவரி 02, 2017

எண்சீர் விருத்தம் ..



காய் - காய்  - மா - தேமா :


மாலையிளங் கதிரொளியில் கண்டேன் அந்த
... மங்கைமுகம் மலரத்தான் கண்ணில் என்றன்
சோலைநிறைப் பூக்களென மலர்ந்தே நெஞ்சில்
...சொப்பனத்தில் கூட அவள் சிரிப்பா ளென்னில்
மாலைவரும் வேளைதனில் மயக்கம் கண்ணில்
...மங்கைமுகம் தான்காணத் துடிக்கும் நெஞ்சம்
பாலையவள் பார்த்திடவே பதறும் மெண்ணம்
...பாழ்மனதில் படுத்திருப்பாள் பாரா தென்னை !

இனம்காணாத் துன்பத்தீ இதயந் தொட்டே
...இக்கணமும் எரிகிறதே ; எரிந்தே வெந்த
மனங்கட்குள் மொட்டவிழ்ந்த காதல் மாயை
... மனங்கொத்திச் செல்வதுவோ ஒற்றைக் காதல்
அனல்சேர்ந்து விளையாடும் அன்பில் வீழ்ந்து
...அலைமோதிச் சாகின்றா ரதுவே உண்மை
தினவெடுத்த நெஞ்சத்தின் கண்கள் கண்டே
... தினமென்னைக் கொல்லுகிறாள் தீயாய் வந்து !

கருத்துகள் இல்லை: