சனி, பிப்ரவரி 25, 2017

புதுக் கவிதை ....





கள்ள முள்ள மனதினில்
உள்ள தெல்லாம் கருப்புதான்
நல்ல உள்ள முள்ளவர்
இல்லை யிங்கு உண்மைதான்

அள்ளு கின்ற நிலைவரின்
உள்ள தெல்லா மள்ளுவார்
சொல்லு கின்ற வார்த்தையில்
சொல்லி ழுக்குச் சுமத்துவார்

வெள்ளை யுள்ள முள்ளவர்
உள்ள தெனில் எம்மிலே
கல்லில் வெட்டி அவர்பெயர்
எல்லைக் கல்லாய் நாட்டுவோம் !

கருத்துகள் இல்லை: