சனி, பிப்ரவரி 25, 2017

புதுக் கவிதை ..



ஒரு
குழந்தையைப் போலக்
கொஞ்சியபடியே பேசுகிறாய்
நகத்தைக்
கடித்தபடியே சிரிக்கிறாய்

இமைகள் சுழற்றி
கதை சொல்கிறாய்
இல்லையென்று இல்லை
எல்லாமே அழகுதான்

உன்
தோள் தொட்டுப்
பேசும்போது மட்டும்
சரிந்து விழாத
முந்தானையை
சரிசெய்து கொள்வாயே
மிஞ்சிவிடுகிறது !

கருத்துகள் இல்லை: