செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012
திங்கள், ஜூலை 30, 2012
ஞாயிறு, ஜூலை 29, 2012
வியாழன், ஜூலை 12, 2012
செவ்வாய், ஜூலை 10, 2012
திங்கள், ஜூலை 02, 2012
சனி, ஜூன் 30, 2012
வியாழன், ஜூன் 21, 2012
தீயதை தீண்டாதே
கொற்றவனின் துணையின்றி கொள்ளா வாழ்வு
மற்றவனின் மருவலிலே சுகமாய் ஆகா
சிற்றின்பப் பெண்டிர்தம் பொல்லா நோக்கு
சீவியத்தை சீரழிக்கும் தீதே தீதே !!
கட்டுக்கும் அடங்காத ஆவல் கொண்டு
சருகுவதால் தீதுனக்கு அறிந்து விடு
கூட்டுக்குள் அடங்குமுந்தன் மானமின்று
நாட்டுக்குள் பரவுவது சுலபம் அன்றோ !!
மனை மணக்க வந்தவளே என்பதனால்
மனையாளே என்றுனக்கு பெயரும் உண்டு
வினையாக இல்லாமல் நிந்தன் வாழ்வு
துணையோடு வாழ்வாங்கு வாழ்ந்தால் போதும் !!
மறுதளித்த வாழ்வெமக்கு வேண்டாம் கண்ணே
ஒருதலையாய் ஒன்றிணைந்து வாழ்ந்தால் வெற்றி
தறுதலையாய் வாழ்ந்துனது வாழ்வினையே
தறிகெட்டு வாழ்வதிலே சுகமே இல்லை !!!
மற்றவனின் மருவலிலே சுகமாய் ஆகா
சிற்றின்பப் பெண்டிர்தம் பொல்லா நோக்கு
சீவியத்தை சீரழிக்கும் தீதே தீதே !!
கட்டுக்கும் அடங்காத ஆவல் கொண்டு
சருகுவதால் தீதுனக்கு அறிந்து விடு
கூட்டுக்குள் அடங்குமுந்தன் மானமின்று
நாட்டுக்குள் பரவுவது சுலபம் அன்றோ !!
மனை மணக்க வந்தவளே என்பதனால்
மனையாளே என்றுனக்கு பெயரும் உண்டு
வினையாக இல்லாமல் நிந்தன் வாழ்வு
துணையோடு வாழ்வாங்கு வாழ்ந்தால் போதும் !!
மறுதளித்த வாழ்வெமக்கு வேண்டாம் கண்ணே
ஒருதலையாய் ஒன்றிணைந்து வாழ்ந்தால் வெற்றி
தறுதலையாய் வாழ்ந்துனது வாழ்வினையே
தறிகெட்டு வாழ்வதிலே சுகமே இல்லை !!!
ஞாயிறு, ஏப்ரல் 29, 2012
வெள்ளி, ஏப்ரல் 20, 2012
புதன், ஏப்ரல் 18, 2012
வெள்ளி, ஜனவரி 27, 2012
ஆசை மச்சான் எங்கு சென்றாய் ?
தொட்டுத் தாலி கட்டி
எட்டே வருஷத்தில்
பட்ட மரம் போல என்னை
பரிதவிக்க விட்ட மச்சான்
பாடையிலே போனதேனோ ?
என்
கொட்டும் கண்ணீரும்
உன்
குழி தேடி வந்துவிடும்
கோலமகன் நீ ஏனோ
பாதியிலே மடிந்து விட்டாய் !
கலகலன்னு பேசி என்னை
கலகலப்பாய் வச்ச மச்சான்
மொழுமொழுன்னு நானிருக்க
திடுமென்று போனதேனோ ?
பிள்ளைத் தாச்சி என்று
என் வயிறு நிறைந்திருக்க
பெற்றவளைப் போல நீங்க
நாளெல்லாம் பார்த்தீங்க.....
ஏழு மாசம் முதற் கொண்டு
என் பிள்ளை இறங்கும் வரை
என் வேலை அத்தனையும்
இறுதி வரை செய்த மச்சான்
என்னை விட்டும் போனதேனோ ?
காலமெல்லாம் உன்னோடு
வாழ்வேண்டு சொன்ன மச்சான்
என் மூச்சு போகும் முன்னே
உன் மூச்சு போனதேனோ ?
ருசியாக இல்லாமல்
எதையேனும் சமைத்தாலும்
மன
நிறைவோடு பாராட்டும்
பாச மச்சான் பிறிந்ததேனோ ?
என் பிள்ளை
என் மனைவி
என்று சொல்லி எந்நாளும்
எங்களையே சுற்றி வரும்
ஆசை மச்சான் எங்கு போனாய் ?
ஆறத் தழுவி என்னை
அன்பொழுக பார்த்த மச்சான்
கூடும் உன் நினைவினிலே
குமுறுதைய்யா என் உள்ளம் !!
இப்புவியில் நீ இன்றி
எப்படித்தான் நான் வாழ்வேன்
கொஞ்சம் பொறு கண்ணு மச்சான்
உன்னிடத்தில் என் உயிரும்
சீக்கிரமே வந்து விடும் !!!
எட்டே வருஷத்தில்
பட்ட மரம் போல என்னை
பரிதவிக்க விட்ட மச்சான்
பாடையிலே போனதேனோ ?
என்
கொட்டும் கண்ணீரும்
உன்
குழி தேடி வந்துவிடும்
கோலமகன் நீ ஏனோ
பாதியிலே மடிந்து விட்டாய் !
கலகலன்னு பேசி என்னை
கலகலப்பாய் வச்ச மச்சான்
மொழுமொழுன்னு நானிருக்க
திடுமென்று போனதேனோ ?
பிள்ளைத் தாச்சி என்று
என் வயிறு நிறைந்திருக்க
பெற்றவளைப் போல நீங்க
நாளெல்லாம் பார்த்தீங்க.....
ஏழு மாசம் முதற் கொண்டு
என் பிள்ளை இறங்கும் வரை
என் வேலை அத்தனையும்
இறுதி வரை செய்த மச்சான்
என்னை விட்டும் போனதேனோ ?
காலமெல்லாம் உன்னோடு
வாழ்வேண்டு சொன்ன மச்சான்
என் மூச்சு போகும் முன்னே
உன் மூச்சு போனதேனோ ?
ருசியாக இல்லாமல்
எதையேனும் சமைத்தாலும்
மன
நிறைவோடு பாராட்டும்
பாச மச்சான் பிறிந்ததேனோ ?
என் பிள்ளை
என் மனைவி
என்று சொல்லி எந்நாளும்
எங்களையே சுற்றி வரும்
ஆசை மச்சான் எங்கு போனாய் ?
ஆறத் தழுவி என்னை
அன்பொழுக பார்த்த மச்சான்
கூடும் உன் நினைவினிலே
குமுறுதைய்யா என் உள்ளம் !!
இப்புவியில் நீ இன்றி
எப்படித்தான் நான் வாழ்வேன்
கொஞ்சம் பொறு கண்ணு மச்சான்
உன்னிடத்தில் என் உயிரும்
சீக்கிரமே வந்து விடும் !!!
செவ்வாய், டிசம்பர் 06, 2011
வேண்டுவன வேண்டும் !!
கண்ணதனைக் கவணமுடன் பேண வேண்டும்
காலமெல்லாம் அதன் ஒளியில் வாழ வேண்டும்
எண்ணமதை நல் வழியில் செலுத்த வேண்டும்
எண்ணிய சொல் மாறாமல் பேச வேண்டும் .......
கல்வியதைக் கசடறவே கற்க வேண்டும்
கற்றததை மற்றோர்க்கும் புகட்ட வேண்டும்
கல்லாதார் குணமறிந்து பழக வேண்டும்
நல்லோர்தம் நட்பதனை நாட வேண்டும் .......
கற்பு நிறை நல் மனைவி அமைய வேண்டும்
காலமெல்லாம் அவளன்பால் திளைக்க வேண்டும்
நற்பண்பு நல்மகவு பெருக வேண்டும்
நானிலத்தில் சிறந்தோராய் வளர்க்க வேண்டும் .......
பெற்றோரை கற்றோரை மதிக்க வேண்டும்
உற்றாரை உறவினரை போற்ற வேண்டும்
சிற்றின்ப ஆசைகளை அடக்க வேண்டும்
சீரியமாய் இப்புவியில் வாழ வேண்டும் .......
பொல்லாதார் நட்பதனைக் களைய வேண்டும்
நல்லோனாய் நானிலத்தில் உளவ வேண்டும்
இல்லாதார் நிலையறிந்து ஈய வேண்டும்
இன்முகமாய்க் கண் மூடி மடிய வேண்டும் ......
காலமெல்லாம் அதன் ஒளியில் வாழ வேண்டும்
எண்ணமதை நல் வழியில் செலுத்த வேண்டும்
எண்ணிய சொல் மாறாமல் பேச வேண்டும் .......
கல்வியதைக் கசடறவே கற்க வேண்டும்
கற்றததை மற்றோர்க்கும் புகட்ட வேண்டும்
கல்லாதார் குணமறிந்து பழக வேண்டும்
நல்லோர்தம் நட்பதனை நாட வேண்டும் .......
கற்பு நிறை நல் மனைவி அமைய வேண்டும்
காலமெல்லாம் அவளன்பால் திளைக்க வேண்டும்
நற்பண்பு நல்மகவு பெருக வேண்டும்
நானிலத்தில் சிறந்தோராய் வளர்க்க வேண்டும் .......
பெற்றோரை கற்றோரை மதிக்க வேண்டும்
உற்றாரை உறவினரை போற்ற வேண்டும்
சிற்றின்ப ஆசைகளை அடக்க வேண்டும்
சீரியமாய் இப்புவியில் வாழ வேண்டும் .......
பொல்லாதார் நட்பதனைக் களைய வேண்டும்
நல்லோனாய் நானிலத்தில் உளவ வேண்டும்
இல்லாதார் நிலையறிந்து ஈய வேண்டும்
இன்முகமாய்க் கண் மூடி மடிய வேண்டும் ......
நானும் தயார்
அன்புள்ள அத்தானே ஆசிர்வாதம்
அஞ்சலின்று கண்டவுடன் அசந்தேவிட்டேன்
இருப்பதையும் கொடுத்துவிட்டு வருவதற்கு
இன்னுமொரு வாரத்தில் சரி வருமோ ?
"கொழும்பினிலே" தங்கி நிதம் நிற்பதனால்
கொடுத்திடுவான் ஏஜென்சி பணத்தை என்றீர்
கண்டறியாப் பயல்களெல்லாம் வேஷம் இட்டு
கழுத்தறுக்கும் ஆளாக ஏன்தான் போனீர் ?
வீட்டோடு காணியுடன் கடையொன்றும்
வாங்கிடலாம் என்றே நீர் எண்ணம் கொண்டீர்
கூட்டோடு இருந்ததெல்லாம் போனதனால்
கனவுகளில் மண்ணையள்ளி ஏன்தான் போட்டீர் ?
சங்கு மணி மாலையையே நிதமும் கேட்டு
சபிக்கின்றார் வாப்பாவும் தினமும் வந்து
சவடியுடன் காதணியும் போனாலென்ன
சின்னவளின் கழுத்துகூடமொட்டை இன்று !
முத்திரைக் கவர் ஒன்றும் வைத்தே உள்ளேன்
முழுப் பதிலை விபரமுடன் எழுதிடுங்கோ
தக்க பதில் இல்லையெனில் எந்தனுக்கு
இல்லை உங்கள் மனைவி என எண்ணிடுங்கோ!
சத்தியமாய் சம்மதமாய் சொல்லுகின்றேன்
சவூதிக்கு போகத்தான் வேண்டுமானால்
வீடு மட்டும் பாக்கி உண்டு அதையும் விற்று
வீதியிலே நிற்பதற்கு நானும் தயார் !!!
அஞ்சலின்று கண்டவுடன் அசந்தேவிட்டேன்
இருப்பதையும் கொடுத்துவிட்டு வருவதற்கு
இன்னுமொரு வாரத்தில் சரி வருமோ ?
"கொழும்பினிலே" தங்கி நிதம் நிற்பதனால்
கொடுத்திடுவான் ஏஜென்சி பணத்தை என்றீர்
கண்டறியாப் பயல்களெல்லாம் வேஷம் இட்டு
கழுத்தறுக்கும் ஆளாக ஏன்தான் போனீர் ?
வீட்டோடு காணியுடன் கடையொன்றும்
வாங்கிடலாம் என்றே நீர் எண்ணம் கொண்டீர்
கூட்டோடு இருந்ததெல்லாம் போனதனால்
கனவுகளில் மண்ணையள்ளி ஏன்தான் போட்டீர் ?
சங்கு மணி மாலையையே நிதமும் கேட்டு
சபிக்கின்றார் வாப்பாவும் தினமும் வந்து
சவடியுடன் காதணியும் போனாலென்ன
சின்னவளின் கழுத்துகூடமொட்டை இன்று !
முத்திரைக் கவர் ஒன்றும் வைத்தே உள்ளேன்
முழுப் பதிலை விபரமுடன் எழுதிடுங்கோ
தக்க பதில் இல்லையெனில் எந்தனுக்கு
இல்லை உங்கள் மனைவி என எண்ணிடுங்கோ!
சத்தியமாய் சம்மதமாய் சொல்லுகின்றேன்
சவூதிக்கு போகத்தான் வேண்டுமானால்
வீடு மட்டும் பாக்கி உண்டு அதையும் விற்று
வீதியிலே நிற்பதற்கு நானும் தயார் !!!
ஞாயிறு, டிசம்பர் 04, 2011
முதுமை
ஆடித் திறிந்த கால்கள்
அடங்கிக் கிடக்கிறது
முதுமை என்னை
ஆக்கிரமித்தபோது .....
எழுந்து
நடமாடப் பார்க்கிறேன்
விழுந்து
முடமாகி விடுவேனோ
என
பயமாக இருக்கிறது .....
சந்தோசங்களை
தொலைத்த நாட்களும்
உணர்வுகளை உறங்க வைத்த
உருப்படாத
அந்த ராத்திரிகளும்
என் மனதை
இன்னும்
அரித்துக்கொண்டே இருக்கிறது .......
என்ன வாழ்க்கை
வாழ்ந்துவிட்டேன்
என்னையே நான்
நொந்து கொள்கிறேன் ........
ஸ்பரிச உணர்வுகள்
என்னை
தூக்கிவிடப்பார்க்கிறது
பாழாய்ப்போன என்
உடம்பு மட்டும்
என்னை அப்படியே
அமுக்கிப் பிடிக்கிறது ......
பேசப் பார்க்கிறேன்
முடியவில்லை
பேச்சுகூட
என்னைப் போலவே
படுத்த படுக்கையாய்.......
உறவுகள்
என்னையே
உற்று உற்று பார்க்கிறார்கள்
எப்போது என்னை
தூக்கிப் போகலாம் என்ற
அவசரத்தில் ...........
ஆனாலும்
பழைய நினைவுகள் மட்டும்
என்னையே
சுற்றிச் சுற்றி வருகிறது
ஒரு
குட்டி போட்ட பூனையைப்போல........
முதுமை வரவேண்டும்
முதிர்ந்து போன
வாழ்க்கையை
நினைத்துப் பார்க்க ...........
அடங்கிக் கிடக்கிறது
முதுமை என்னை
ஆக்கிரமித்தபோது .....
எழுந்து
நடமாடப் பார்க்கிறேன்
விழுந்து
முடமாகி விடுவேனோ
என
பயமாக இருக்கிறது .....
சந்தோசங்களை
தொலைத்த நாட்களும்
உணர்வுகளை உறங்க வைத்த
உருப்படாத
அந்த ராத்திரிகளும்
என் மனதை
இன்னும்
அரித்துக்கொண்டே இருக்கிறது .......
என்ன வாழ்க்கை
வாழ்ந்துவிட்டேன்
என்னையே நான்
நொந்து கொள்கிறேன் ........
ஸ்பரிச உணர்வுகள்
என்னை
தூக்கிவிடப்பார்க்கிறது
பாழாய்ப்போன என்
உடம்பு மட்டும்
என்னை அப்படியே
அமுக்கிப் பிடிக்கிறது ......
பேசப் பார்க்கிறேன்
முடியவில்லை
பேச்சுகூட
என்னைப் போலவே
படுத்த படுக்கையாய்.......
உறவுகள்
என்னையே
உற்று உற்று பார்க்கிறார்கள்
எப்போது என்னை
தூக்கிப் போகலாம் என்ற
அவசரத்தில் ...........
ஆனாலும்
பழைய நினைவுகள் மட்டும்
என்னையே
சுற்றிச் சுற்றி வருகிறது
ஒரு
குட்டி போட்ட பூனையைப்போல........
முதுமை வரவேண்டும்
முதிர்ந்து போன
வாழ்க்கையை
நினைத்துப் பார்க்க ...........
என் இனியாள்
வான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின்
வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள்
தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட
தேன் மதுரக் கலச மெந்தன் இனியாள்
கோல மயில் போலவளின் அழகும் மின்னும்
வேலனவன் படைப்பினிலே புதுமைப் பெண்ணாய்
காலமது போதாது இன்பங் கொள்ள
கண் மூடி துயில் கையிலும் அவளே முன்னே
கார் முகில் போல் கருங் கூந்தல் கலைந்திருக்கும்
நாருரித்த மரமதுபோல் பசுமை பொங்கும்
பார்தனிலே இவள் போல ஒருத்தி முன்னே
பார்வையிலே பட்டதில்லை உண்மை சொன்னால்
மான் விழியாள் பார்வயதோ மயங்க வைக்கும்
மருளுகின்ற விழிகளிலே நளினம் தோன்றும்
தேன் மொழியாள் பேச்சினிலே காமஞ் சொட்டும்
தெள்ளு தமிழ் நாவினிலே நடனம் ஆடும்
கள்ளியவள் கடைப் பார்வை கவர்ந்திழுக்கும்
அள்ளியவள் பொன் மேனி தழுவச் சொல்லும்
பள்ளியறைப் பாடமெல்லாம் எண்ணம் மூட்டி
கிள்ளி எந்தன் பால் மனதோ ஆவல் தூண்டும்
![]() |
வனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள்
தேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட
தேன் மதுரக் கலச மெந்தன் இனியாள்
கோல மயில் போலவளின் அழகும் மின்னும்
வேலனவன் படைப்பினிலே புதுமைப் பெண்ணாய்
காலமது போதாது இன்பங் கொள்ள
கண் மூடி துயில் கையிலும் அவளே முன்னே
கார் முகில் போல் கருங் கூந்தல் கலைந்திருக்கும்
நாருரித்த மரமதுபோல் பசுமை பொங்கும்
பார்தனிலே இவள் போல ஒருத்தி முன்னே
பார்வையிலே பட்டதில்லை உண்மை சொன்னால்
மான் விழியாள் பார்வயதோ மயங்க வைக்கும்
மருளுகின்ற விழிகளிலே நளினம் தோன்றும்
தேன் மொழியாள் பேச்சினிலே காமஞ் சொட்டும்
தெள்ளு தமிழ் நாவினிலே நடனம் ஆடும்
கள்ளியவள் கடைப் பார்வை கவர்ந்திழுக்கும்
அள்ளியவள் பொன் மேனி தழுவச் சொல்லும்
பள்ளியறைப் பாடமெல்லாம் எண்ணம் மூட்டி
கிள்ளி எந்தன் பால் மனதோ ஆவல் தூண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)