வியாழன், அக்டோபர் 17, 2013

பாடும் பறவைகளே !

பாடித் திரியும்
 பறவைகளே
பாடல் நிறுத்தி
 கேளுங்களேன்

நஞ்சாம் மனிதர்
 வாழுமிடம்
தஞ்சம் என்று
 வாழாதீர்

குவிந்து குவிந்து
 கொஞ்சலுடன்
கூடிக் கூடிக்
 கொஞ்சாதீர்

கிளையில் அமர்ந்து
இலை மூடி
நிலையாம் காதல்
  பண்ணாதீர்

நிலைமை அறியா
 மானிடனோ
களைத்தே  இன்பம்
 அடைந்திடுவான்

உண்டில் கொடுத்தும்
 அழைத்திடுவான்
"சுண்டில் " கொண்டும்
 அடித்திடுவான்

 காடும் மலையும்
 நமக்குண்டு
பாடும் பறவை
 கூட்டங்களே

இறக்கை கட்டி
 பறந்திடவே
சிறகுகள் நமக்கு
 துணையுண்டு

தீண்டா இடத்தை
 தேடிடுவோம்
வேண்டாம் மனிதர்
 வாழுமிடம் ....


    *அஷ்பா அஷ்ரப் அலி *

கருத்துகள் இல்லை: