ஞாயிறு, மே 22, 2016

எண்சீர் விருத்தம்

விண்ணுலகம் மண்ணுலகம் விழிக்கச்  செய்ய
  விளக்கேற்றி வருபவனே பகலோன் செல்வன்
கண்ணுறங்கிக் கடல்குளித்துக் காட்டுங்  காலைக்
  கதிரொளியின் அற்புதங்கள் கொஞ்சம் அல்ல
மண்ணிலிங்கு வாழுகின்ற உயிர்கள் தொட்டு
  மாண்புறயிக் கதிரோனின் ஒளியே அன்றி
எண்ணிலிலா  இயற்கைஎழில் இருந்தும்  மென்ன
  எத்திசைக்கும் திங்களொளி  தானே  வேண்டும் !


ஒளியளித்த  களைப்பினிலே கதிரோன் மெல்ல
  ஒலிகடலில் கால்நனைத்து  நடப்பான் பின்னே
களிநடனம் ஆடிஆடி மதியாள்  வானில்
  காரிருளைக்  கிழித்துவரத் தன்கை வீசிக்
கிலிதொடுத்த பறவையினம் காக்கை கூட்டம்
  கீச்சிட்டே தானடையும் தத்தம்  கூட்டில்
குளிர்நிலவின் இளமையிலே இரவும் துள்ளும்
  குமரியவள் முகம்பார்த்தே மேகம்  ஓடும் !


   காய் - காய் - மா - தேமா 

கருத்துகள் இல்லை: