வியாழன், ஜூன் 02, 2016

காவடிச் சிந்து

அஞ்சனங்கள் சூழ்ந்தவிழி யோடு - ஒரு
ஆரணங்கைக் கண்டதனால் பாடு - தினம்
     அன்னநடைப் போட்டுவரும்
     சின்னயிடைக் காணமனம்
     ஆறும் - அதன்வா - யூறும்

கொத்துமலர்க் கூந்தலிலே சூடி - ஒரு
கோலமயில் போல்வருவா  ளாடி - தினம்
    கொஞ்சுமொழிப்  பேசுமிதழ்
    மிஞ்சிவிடும் பேரழகைக்
    கூட்டி - ஆவல் - ஊட்டி

சின்னவிழிப் பார்வையினால் சீண்டி - பலர்
சிந்தையையும் நாள்முழுதுந்  தீண்டி - அவள்
     செவ்வழகைக்  காண்பவரில்
      எவ்வயதும் தான்பதறச்
      செய்யும் - அதவே - மெய்யும் !

கருத்துகள் இல்லை: