வியாழன், ஜூன் 02, 2016

காதலியே !

மலர்களிலே கால்நனைத்து
நடந்து வந்தாயா - அதன்
அழகையெலாம் விரல்நுனியில்
கோர்த்து வந்தாயா


இளநெஞ்சில் கிடந்துநீயும்
ஆள வந்தாயா - என்
ஈரநெஞ்சில் கிடந்துநாளும்
நனைய வந்தாயா

புலவர்களின் குளத்தினிலே
குளிக்க வந்தாயா - அவர்
பொன்னெழுத்தில் மிளிரவெனப்
பிறந்து வந்தாயா


இளந்தென்ற லோடுநீயும்
கலந்து வந்தாயா - உன்
காதலைஎன் காதினிலே
சொல்ல வந்தாயா ?

கருத்துகள் இல்லை: