செவ்வாய், ஜனவரி 24, 2017

ஊடலுண்டோ !







நீரசையும் குளத்தினிலே நின்ற வாறு
நினைவிழந்து நிட்பதுமேன் அல்லிப் பாவாய்
நாரசையாப் பொழுதினிலும் சிரிக்கும் முன்னை
நோகடித்தா ராரென்று சொல்வா யல்லி

ஊரறியக் கதிரவனும் உதிக்கும் பொழுதில்
உலகமெலாம் ஒளிருகின்ற வேளை தன்னில்
பேரறியாப் பிள்ளைபோல் பதுங்கிப் பின்னே
படபடத்து நிட்பதுமேன் பகிர்வாய் அல்லி

மாலைவரும் மதியாளின் மயக்கும் மொளியில்
மலர்வதெனச் சொல்கின்றார் உண்மை என்ன
ஓலையுனக் கனுப்பினாளோ ஒற்றை வரியில்
ஓர்மனமாய் காதலுண்டோ சொல்வாய் அல்லி !

கருத்துகள் இல்லை: