வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காதில் வந்து பாடு ...



மலர்களிலே கால்நனைத்து
நடந்து வந்தாயா - அதன்
அழகையெலாம் விரல்நுனியில்
கோர்த்து வந்தாயா !

இளநெஞ்சில் கிடந்துநீயும்
ஆள வந்தாயா - என்
ஈரநெஞ்சில் கிடந்துநாளும்
நனைய வந்தாயா !

புலவர்களின் குளத்தினிலே
குளிக்க வந்தாயா - அவர்
பொன்னெழுத்தில் மிளிரவெனப்
பிறந்து வந்தாயா !

இளந்தென்ற லோடுநீயும்
கலந்து வந்தாயா- உன்
காதலைஎன் காதினிலே
சொல்ல வந்தாயா !

கருத்துகள் இல்லை: