திங்கள், பிப்ரவரி 06, 2017

இயல்பு ...



கடலும் நதியும் பேசுவதைக்
... கண்ணால் கண்டோர் எவருமில்லை
கடக்கும் காற்றோ மரங்களுடன்
... கலந்தே பேசும் கேட்பதில்லை
நடக்கும் நிலவோ மேகத்துடன்
... நடந்தே பேசும் தெரிவதில்லை
அடக்கம் நிறைந்த மனிதமுகம்
... அலையெனப் பாய்வது தெரிந்துவிடும்

இரவும் பகலும் இரக்கமுடன்
... இனிதே பேசிப் பிரிந்துவிடும்
பறக்கும் பூச்சிப் பறவையெலாம்
... பாடிக் கூடி இணைந்துவிடும்
நெருப்பும் காற்றும் பகையின்றி
... நேரம் வந்தால் சேர்ந்துவிடும்
பொறுப்பில் லாதவன் கைகளிலே
... பொறுப்புகள் வந்தால் உறங்கிவிடும்

கருத்துகள் இல்லை: