சனி, ஜனவரி 11, 2014

அறஞ் செய்வோர் வேண்டும் !

ஆளில்லா  உலகமென அருவருப்பில் மூழ்குபவர்
  அடையாளம்  கண்டவரை  கருவறுக்க  வேண்டும்
நாளினிதாய்  நகர்ந்திடநல் 
அறங்கலெனச்  செய்து
  நலம்மிகு  நாளிகைகள்  நமையிழக்க  வேண்டும்
வேலிகளுள் 
விழுந்தழுகும்  விழுதுகளாய்  ஏழ்மைப்
  பெண்களுக்கு  வாழ்வளிக்கும்  இளைஞரிங்கு  வேண்டும்
போலிகளாய்  வேசமிடும்  பெயர்தாங்கித்  தலைவர்
  பரம்பரையைத்  துரத்திடவோர்  இளைஞரணி  வேண்டும் !


நாளெல்லாம்  நலிவுருவோர்  நலம்வேண்டி  இங்கு
 நல்லெண்ணம்  கொண்டோர்கள்  பிறப்பெடுக்க  வேண்டும்
நாளவையில்  நாவினிக்க  நல்வாக்கு  கூறி
  நாணயத்தை 
இழந்தவரை  நாருரிக்க  வேண்டும்
களப்படி  அளக்காத  களவாணி  முதலாளி
  கண்கலங்கும் தொழிலாளி  கண்துடைக்க  வேண்டும்
உளப்பாடு  கொண்டோரை  உள்வாங்கி  மனதில்
  உவகையுடன்  வாழவழி  காட்டிடுவோர்  வேண்டும் !


         அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: