சனி, ஜனவரி 11, 2014

நெட்டி விடும் விரலால் சொல்லு !

வெட்ட  வெளி  வானிலெங்கும்
வட்டமிடும்  வெண்ணிலவாய்
திட்டமிட்டு  விழிகளினால்
சுட்டு  எனை நோக்குவதேன்

கட்டழகு  கவிதை சொல்லி
காட்டுதடி  புன்னகையாய்
மொட்டு  விடும்  புன்னகையை
எட்டி  நின்று  வீசுவதேன் 

தொட்டுவிட துடிக்கு ( ம் ) மனம்
தட்டுப்  பட்டு  விழுகுதடி
கிட்ட  வந்து  நின்றுயென்னை
தட்டிக் கொஞ்சம் பார்த்து விடு

அட்டையை  போல்  ஒட்டிக்கொள்ள
இட்டம்  எனும்  இதயத்திற்கு
நெட்டி  விடும் விரலை கொஞ்சம்
நீட்டி ஒரு பதிலைச் சொல்லு ..


     அஷ்பா அஷ்ரப் அலி 

கருத்துகள் இல்லை: