வெள்ளி, ஜூன் 03, 2016

காவடிச் சிந்து


சின்னக்கு ழந்தைநீ  தங்கமே - நீ
செல்லுமி டங்களில் பங்கமே - உன்
செவ்வழ கானதோ ரங்கமே - இதைச்
    சிதைப்பரடி வதைப்பாரடி
     இழப்பாயடி நிலைப்பாடிது
சிந்தனை யோடேநீ எங்குமே - தினம்
சென்றுவந் தால்மனம் பொங்குமே !


கண்ணீரால் சொல்லுமென் சொல்லையே - காணக்
கன்னிப்பெண் ணாகநீ  யில்லையே - உனைக்
காத்துவ ளர்ப்பதுந் தொல்லையே - என்
   கனவேயிது நனவாகுது
    கனியேயிது  கலிகாலமே
கண்ணெதிர் காண்கிறேன் பிள்ளையே - இங்கு
காமுக ரால்பெருந்  தொல்லையே !

கருத்துகள் இல்லை: